/* */

ஈரோடு: தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழப்பு - கணவர் தீக்குளிக்க முயற்சி

ஈரோட்டில் தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழந்ததை கண்டித்து தனியார் மருத்துவமனை முன்பு கணவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

ஈரோடு: தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழப்பு - கணவர் தீக்குளிக்க முயற்சி
X

உறவினர்கள் சுதா மருத்துவமனை முன்பு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் காந்தி-காயத்திரி தம்பதியினர்.கடந்த டிசம்பரில் காயத்திரிக்கு டயாலிசிஸ் செய்ய ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயத்திரிக்கு குளிர் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படும் எனவே அறையின் குளிர்சாதன பெட்டியை நிறுத்த கணவர் காந்தி எச்சரித்துள்ளார்.
இதனை கேட்காமல் செவிலியர்கள் டயாலிசிஸ் செய்ய ஏற்பாடுகளை தொடங்கியுள்ளனர்‌.‌சிறிது நேரத்தில் காயத்திரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து செவிலியர்கள், அந்த அறையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் காலியாக இருந்ததையடுத்து மற்ற வார்டில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்து வந்துள்ளனர்.


அதற்குள் காயத்திரி மூச்சின்றி கிடந்துள்ளார்.இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக காயத்திரி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.இதனை ஏற்க மறுத்து காந்தி, மருத்துவமனையின் முறையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் பராமரிப்பு இல்லாததால் தேவையான நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் மனைவி காயத்திரி உயிரிழந்ததாக மருத்துவமனை மீது புகார் தெரிவிக்கின்றார்.


மேலும், இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மருத்துவமனைக்கு உதவும் வகையில் நடந்து கொண்டதாக கூறி தனியார் மருத்துவமனை மீதும் அதற்கு உதவியாக இருந்த மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என கூறி தனியார் மருத்துவமனை முன்பு கணவர் காந்தி தீக்குளிக்க மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றினார்.


அப்போது அங்கிருந்த காவலர்கள் அவரை தண்ணீர் ஊற்றி பத்திரமாக மீட்டனர்இதனிடையே இறந்து போன பெண்னின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

Updated On: 26 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.