ஈரோடு: தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழப்பு - கணவர் தீக்குளிக்க முயற்சி

ஈரோடு: தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழப்பு - கணவர் தீக்குளிக்க முயற்சி
X

உறவினர்கள் சுதா மருத்துவமனை முன்பு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

ஈரோட்டில் தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழந்ததை கண்டித்து தனியார் மருத்துவமனை முன்பு கணவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் காந்தி-காயத்திரி தம்பதியினர்.கடந்த டிசம்பரில் காயத்திரிக்கு டயாலிசிஸ் செய்ய ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயத்திரிக்கு குளிர் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படும் எனவே அறையின் குளிர்சாதன பெட்டியை நிறுத்த கணவர் காந்தி எச்சரித்துள்ளார்.
இதனை கேட்காமல் செவிலியர்கள் டயாலிசிஸ் செய்ய ஏற்பாடுகளை தொடங்கியுள்ளனர்‌.‌சிறிது நேரத்தில் காயத்திரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து செவிலியர்கள், அந்த அறையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் காலியாக இருந்ததையடுத்து மற்ற வார்டில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்து வந்துள்ளனர்.


அதற்குள் காயத்திரி மூச்சின்றி கிடந்துள்ளார்.இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக காயத்திரி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.இதனை ஏற்க மறுத்து காந்தி, மருத்துவமனையின் முறையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் பராமரிப்பு இல்லாததால் தேவையான நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் மனைவி காயத்திரி உயிரிழந்ததாக மருத்துவமனை மீது புகார் தெரிவிக்கின்றார்.


மேலும், இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மருத்துவமனைக்கு உதவும் வகையில் நடந்து கொண்டதாக கூறி தனியார் மருத்துவமனை மீதும் அதற்கு உதவியாக இருந்த மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என கூறி தனியார் மருத்துவமனை முன்பு கணவர் காந்தி தீக்குளிக்க மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றினார்.


அப்போது அங்கிருந்த காவலர்கள் அவரை தண்ணீர் ஊற்றி பத்திரமாக மீட்டனர்இதனிடையே இறந்து போன பெண்னின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி