/* */

ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐ.,க்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐக்களில் மாணவர் நேரடி சேர்க்கைக்கு அக்.,10 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐ.,க்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
X

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை நீட்டிப்பு.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐக்களில் மாணவர் நேரடி சேர்க்கைக்கு அக்.,10 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களான ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் பொறியியல் (எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர். ஒயர்மேன், வெல்டர், டெக்ஸ்டைல்ஸ், மெக்கானிக் மோட்டர் வெகிக்கிள், ஏசி மெக்கானிக்) மற்றும் பொறியியல் அல்லாத (கம்ப்யுட்டர் ஆபரேட்டர் மற்றும் கட்டிடபட வரைவாளர்) மற்றும் Industry 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக துவக்கப்படவுள்ள தொழிற்பிரிவுகளில் (Manufacturing Process Control and Automation, Industrial Robotics and Digital Manufacturing Technician, Basic Designer and Virtual verifier Advanced CNC Machining Techniclan) 2023 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட சேர்க்கை கடந்த ஜூலை மாதம் 12ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து மீதமுள்ள காலியிடங்களை 100 சதவீதம் பூர்த்தி செய்திடும் பொருட்டு நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி வரும் அக்டோபர் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்பதால் இந்த வாய்ப்பினை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் மாத உதவித்தொகை ரூபாய் 750, விலையில்லா லேப்டாப் சைக்கிள். சீருடை. பாட புத்தகங்கள். காலணி மற்றும் பேருந்து பாஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும். 8-ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி மற்றும் 10-ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் முறையே 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு மத்திய, மாநில அரசு மற்றும் பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: (அசல் மற்றும் நகல்) 8-ஆம் வகுப்பு/ 10 -ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 10 ஆம் வகுப்பு முடித்திருப்பின் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மற்றும் சேர்க்கை கட்டணம் ரூ.200 ஒரு அசல் மதிப்பெண் சான்றிதழுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு அசல் மதிப்பெண் சான்றிதழுக்கும் ரூ.50 மேற்காணும் ஆவணங்களை நேரில் எடுத்து வர வேண்டும். ஆன்லைனில் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த ஏடிஎம் அட்டை , ஃபோன் பே , கூகுள் பே கொண்டு வரவும்.

கூடுதல் விவரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு 0424-2275244 மற்றும் உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ஈரோடு 0424-2270044 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Oct 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  2. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  3. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  4. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  5. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  6. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...