/* */

பவானி அருகே செல்போன் பேசியதால் கண்டிப்பு: கல்லூரி மாணவி தற்கொலை

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே செல்போன் பேசியதை கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பவானி அருகே செல்போன் பேசியதால் கண்டிப்பு: கல்லூரி மாணவி தற்கொலை
X

பைல் படம்

ஈரோடு பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை அரிஜன காலனியை சேர்ந்தவர் லட்சுமணன் (42). இவரது மகள் கீர்த்தனா (17). இவர், நம்பியூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு தமிழ் இலக்கியம் படித்து வந்தார்.

இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை கவனித்த கீர்த்தனாவின் தந்தை லட்சுமணன், நேற்று அவரிடம் இருந்து போனை பிடுங்கி வைத்து கொண்டதாக தெரிகிறது.

இதனால், மனமுடைந்த கீர்த்தனா தூக்கிட்டு கொலைக்கு முயன்றுள்ளார். நீண்ட நேரம் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த லட்சுமணன், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது, கீர்த்தனா தூக்கில் தொங்கியுள்ளார். அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கீர்த்தனாவை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து, அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 23 Sep 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...