ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
X

டாஸ்மாக் கடை (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி மிலாடி நபியையொட்டி, அனைத்து வகை மதுக்கடைகளையும் மூட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

Erode Today News, Erode News - ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி மிலாடி நபியையொட்டி, அனைத்து வகை மதுக்கடைகளையும் மூட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் வருகிற 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 மதுபான விடுதிகள், ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மேற்கண்ட தினத்தில் மூடப்பட வேண்டும்.

அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து 17ம் தேதியன்று முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2,எப்.எல்.3 மதுபான உரிம தலங்கள் மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business