முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: கோபியில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாட்டம்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: கோபியில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாட்டம்
X

Erode news- முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

Erode news- தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் மரக்கன்றுகள் நட்டு ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Erode news, Erode news today- தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் மரக்கன்றுகள் நட்டு ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் விதமாக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில், ஆதரவற்றோர் தங்கும் விடுதியில் உள்ள முதியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (இன்று) நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு, மாவட்ட அமைப்பாளர் செந்தில் குமார் தலைமை வகித்தார். மாநில நெசவாளர் அணியின் துணை செயலாளர் மணிமாறன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் செல்வம், தலைவர் கைலாஷ் குமார், கோபி நகர்மன்ற தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கியும் விடுதி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தும் முதல்வரின் பிறந்தநாள் விழாவினை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம் மற்றும் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜூனாயத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business