/* */

சென்னை மேயர் பிரியா ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து சென்னை மேயர் பிரியா கருங்கல்பாளையம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

சென்னை மேயர் பிரியா ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்கு சேகரிப்பு
X

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சென்னை மேயர் பிரியா.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து சென்னை மேயர் பிரியா கருங்கல்பாளையம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமைச்சர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி கருங்கல்பாளையம் 39வது வார்டு கே.எஸ்.நகர் பகுதியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, திமுக அரசின் சாதனை குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி கை சின்னத்துக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். வாக்கு சேகரிக்கும் போது மேயர் பிரியா, முரசு கொட்டி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தி கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

பிரசாரத்தின் போது தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவர் ரங்கநாதன், 39வது வார்டு செயலர் மகேஷ் வரன், 39வது வார்டு கவுன்சிலர் கீதாஞ்சலி செந்தில்குமார், கருங்கல்பாளையம் மக்கள் சேவை மைய தலைவரும், திமுக பிரமுகருமான கேபிள் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Feb 2023 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்