/* */

ஈரோட்டில் நடந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமில் 835 பேர் பலன்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமில் 835 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் நடந்த  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமில் 835 பேர் பலன்
X

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம், ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 5,500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம் தொடங்கியது. நேற்று நடந்த முகாமில் 835 முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Updated On: 21 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...