பவானியில் இம்முடி கெட்டி முதலியார் பிறந்த நாள் விழா..!

பவானியில் இம்முடி கெட்டி முதலியார் பிறந்த நாள் விழா..!

இம்முடி கெட்டி முதலியார் சிலைக்கு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இம்முடி கெட்டி முதலியார் சிலைக்கு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இம்முடி கெட்டி முதலியார் சிலைக்கு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கொங்கு நாட்டில் கி.பி. 7ம் நூற்றாண்டில் ஒரு பகுதியை ஆண்ட சிற்றரசரும், பவானி சங்கமேஸ்வரர் கோவிலை கட்டிய மாமன்னர் இம்முடி கெட்டி முதலியார். இவருடைய பிறந்தநாளான தை அமாவாசை திருவோணம் நட்சத்திரம் அன்று தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பாக, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள இம்முடி கெட்டி முதலியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பூஜைகள் செய்தும் வழிபாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி இருக்கவும், சந்தோசமாக வாழவும் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பாக ஈரோடு மாவட்டத் தலைவர் நந்தகோபால் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் வழிபாடு செய்து அன்னதானம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கெட்டி முதலியார் பேரவை தலைவர் நாகேஷ்வரன், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க நிர்வாகிகள் வச்சவேலு, வைரம், முருகானந்தபதி, பிரதாப், யோகானந்தன், தங்கமாதேஸ்வரன், வெண்டிபாளையம் அனைத்து கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், குருப்பநாயக்கன்பாளையம் கிளை நிர்வாகிகள், கவுந்தப்பாடி கிளை நிர்வாகிகள், கெட்டி முதலியார் பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story