பவானிசாகர்: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்

X
By - S.Gokulkrishnan, Reporter |19 Dec 2021 3:15 PM IST
பவானிசாகர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் தப்பியோட்டம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தயிர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி.விவசாயி. இவரது மனைவி ஷோபனா (வயது 41).
குடும்ப தகராறில், ஷோபனாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கணவர் வேலுசாமி வீட்டில் இருந்த அரிவாளால் அவரை தலை மற்றும் வலது கை ஆகிய இடங்களில் வெட்டினார். இதில் ஷோபனா படுகாயமடைந்தார்.
இதனையடுத்து, ஷோபனா சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேலுசாமியை தேடி வருகிறார்கள்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu