/* */

புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடு விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகையையொட்டி புளியம்பட்டி வார சந்தையில் விற்பனை செய்யப்பட்ட ஆடுகளின் விலை ரூ.200 முதல் 500 வரை உயர்ந்தது.

HIGHLIGHTS

புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடு விற்பனை அமோகம்
X

பு.புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடு விற்பனை செய்யும் வியாபாரி.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பு.புளியம்பட்டி கால்நடை சந்தை வாரம்தோறும் வியாழக்கிழமை கூடுவது வழக்கம். இதேபோல் நேற்றும் (21ம் தேதி) வழக்கம்போல் கூடியது. சந்தைக்கு, 500க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், 400க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வந்தன. இந்த சந்தையில் கடந்த வாரத்தை விட ஆடுகளின் விலை, 200 முதல், 400 ரூபாய் வரை உயர்ந்தது. குறிப்பாக கடந்த வாரம், 10 கிலோ வரையிலான வெள்ளாடு கிடாய், 5,500 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று அதே எடை கொண்ட வெள்ளாடு, 6,000 ரூபாய் வரை விற்பனையானது. புரட்டாசி மாதம் முடிந்த நிலையில், தீபாவளி வருவதால் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக, வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்

வழக்கம்போல் மளிகை, காய்கறி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை போட்டனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில், கடை கடையாக சென்று வியாபாரிகளிடம், கொரோனா பரிசோதனை செய்தனர்.

Updated On: 22 Oct 2021 6:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  6. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  7. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  9. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  10. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!