/* */

பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும்:அதிகாரிகள் தகவல்

பவானிசாகர் அணையில், இனி 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும்:அதிகாரிகள் தகவல்
X

பவானிசாகர் அணை 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் விளங்குகிறது. அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

தற்போது, அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டிள்ளது. பவானிசாகர் அணையின் பாதுகாப்பு விதிமுறைப்படி, அக்டோபர் மாதம் இறுதி வரை, 102 அடி வரை மட்டுேம தண்ணீர் தேக்க வேண்டும். நவம்பர் 1-ந் தேதியில் இருந்து தான் 105 அடிக்கு தண்ணீர் தேக்க வேண்டும். இதனால் கடந்த 12-ந் தேதி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும், அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.

தற்போது நவம்பர் பிறந்துள்ளதால், அணையின் விதிமுறைப்படி நேற்று, 102 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கப்பட்டது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு, நேற்றில் இருந்து நிறுத்தப்பட்டது. இனி அணையில் 105 அடிக்கு தண்ணீர் தேக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102.04 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 827 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும், ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Updated On: 2 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  3. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  6. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  8. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  9. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு