பவானிசாகர் அணை நீர்மட்டம் 66.14 அடியாக உயர்வு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66.14 அடியாக உயர்வு

பவானிசாகர் அணை.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 66.14 அடியாக உயர்ந்துள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (2ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 66.14 அடியாக உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையின், முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் உள்ளன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று (1ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,369 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (2ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,994 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 65.48 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 66.14 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 9.16லிருந்து 9.41 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 1.0 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story