பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.41 அடியாக சரிவு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.41 அடியாக சரிவு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (மே.13) இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.41 அடியாக சரிந்துள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (மே.13) இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.41 அடியாக சரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44.41 அடியாக குறைந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதி சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கடல் போல் பிரம்மாண்டமாக காட்சியளித்த பவானிசாகர் அணை தற்போது குளமும், குட்டையுமாக காட்சியளிக்கிறது.

அணைக்கு வினாடிக்கு 24 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 200 கன அடி நீரும் என மொத்தம் 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 3.22 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!