பவானி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாலசுப்பிரமணியன் காலமானார்

பவானி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாலசுப்பிரமணியன் காலமானார்
X

எஸ்.என்.பாலசுப்பிரமணியன்.

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாலசுப்பிரமணியன் காலமானார். அவருக்கு வயது 86.

Erode Today News, Erode Live Updates - பவானி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாலசுப்பிரமணியன் காலமானார். அவருக்கு வயது 86.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சிறைமீட்டான்பாளையம் அடுத்த வைரமங்கலத்தைச் சேர்ந்தவர் எஸ்.என்.பால சுப்பிரமணியன் (வயது 86). இவர், 1996ம் ஆண்டு தேர்தலில் பவானி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி மக்கள் பணி செய்தார்.

மேலும் , இவர் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர், கஸ்தூரிபா காந்தி அறக்கட்டளை தலைவர், வேளாளர் கல்வி நிறுவனங்களின் இணைச்செயலாளர், ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாக குழு தலைவர் உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார்.

Bhavani Former MLA Passed Away

இந்த நிலையில், நேற்று (18ம் தேதி) மாலை 4.25 மணி அளவில் வைரமங்கலத்தில் உள்ள இல்லத்தில் எஸ்.என்.பாலசுப்பிரமணியன் காலமானார். அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள். முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

காலமான எஸ்.என்.பாலசுப்பிரமணியனுக்கு கஸ்தூரி என்ற மனைவியும், என்.பி.ஆனந்த் என்ற மகனும், பி.கே.சாந்தி என்ற மகளும் உள்ளனர்.

Tags

Next Story
மிஸ் பண்ண அமெரிக்கா..! டாப்ல இந்தியா.. நோபல் பரிசாளர் ‘பளிச்’