பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அம்மாபேட்டை காவலர் தூக்கிட்டு தற்கொலை

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அம்மாபேட்டை காவலர் தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை செய்து கொண்ட காவலர் செல்வக்குமார்.
பவானி அருகே அம்மாபேட்டையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பவானி அருகே அம்மாபேட்டையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 34). இவர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அம்மாபேட்டை அருகே சின்னப்பள்ளம் காவல் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த வாகனங்களை சோதனை செய்த போது காவலர் செல்வக்குமார் குடிபோதையில் ஓட்டுநர் ஒருவரிடம் பணம் கேட்டு அடித்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்த, காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து அறிந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் விசாரணை நடத்தினார். பின்னர், காவலர் செல்வக்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, செல்வக்குமார் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று செல்வக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்ததும் செல்வக்குமாரின் உறவினர்கள் அம்மாபேட்டை காவல் நிலையம் அருகே அம்மாபேட்டை - பவானி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
Similar Posts
சென்னம்பட்டியில் ரூ.38.60 லட்சத்தில் சமுதாய கூடம் திறந்து வைத்த அந்தியூர் எம்எல்ஏ
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
எஸ்பிஐ-ல் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு..!
மின்வேலியில் நேரடியாக மின்சாரம் பாய்ச்சியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சி இணைப்பை எதிர்ப்பு போராட்டம்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை..!
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அம்மாபேட்டை காவலர் தூக்கிட்டு தற்கொலை
கவரப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி..!
ஈரோட்டில் இன்று அதிகாலை மின்கம்பத்தில் கார் மோதி விபத்து: 2 இளம் பெண்கள் உயிரிழப்பு
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
நீர் இருப்பில் கவலைக்கிடமான நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி..!
சிங்கம் அகெய்ன் பாக்குறதுக்கு முன்னாடி இந்த 4 படங்களையும் பாருங்க...!
நவராத்திரி: சிவாஜியின் பன்முக நடிப்புத் திறமையின் உச்சம்