/* */

அந்தியூர் அருகே வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் ரூ.1 கோடி மதிப்பு வாழைமரங்கள் சேதம்

Erode news today - அந்தியூர் அருகே நேற்றிரவு வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமாயின.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் ரூ.1 கோடி மதிப்பு வாழைமரங்கள் சேதம்
X

முறிந்து விழுந்துள்ள வாழை மரங்கள்.

Erode news today - ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றில், ரூ.1 கோடி மதிப்புள்ள 20,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகின.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றினால் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகியுள்ளன.

கடந்த 2 நாட்களாக பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்றிரவு மாவட்டத்தின் அந்தியூர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது.


இந்த பலத்த சூறாவளி காற்றால் புதுக்காடு, விளாங்குட்டை, கள்ளிமடைகுட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அறுபது ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் தென்னை மரங்களும் சாய்ந்து விழுந்துள்ள நிலையில், அங்கு மின் கம்பங்களையும் விட்டுவைக்க வில்லை. மின் கம்பங்கள் விழுந்ததால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். பலத்த காற்றில், ரூ.1 கோடி மதிப்புள்ள 20,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதிக்கு நேரில் சென்று மின்வாரிய ஊழியர்கள் முறிந்து விழுந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே வீசிய சூறாவளி காற்றால், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், முறிந்து சேதம் அடைந்தன.

சிறுமுகை அடுத்த இலுப்பநத்தம், இரும்பறை ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் 2 வாரங்களில் அறுவடை செய்யும் நிலையி வாழைத்தார்கள் இருந்தன. சில கிராமங்களில் ஒன்பது மாதமான வாழை மரங்கள் உள்ளன. இந்த நிலையில், நேற்று முன் தினம் வீசிய சூறாவளிக் காற்றில், 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து, சேதம் அடைந்தன.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், ஒரு வாழைக்கு, 150 ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள, வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

Updated On: 19 March 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்