சென்னிமலை மு.பிடாரியூரில் காசநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

சென்னிமலை மு.பிடாரியூரில் காசநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Erode news- நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் காசநோய் ஒழிப்பு குறித்து ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவ பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் எடுத்துரைத்த போது எடுத்த படம்.

Erode news- ஈரோடு மாவட்டம் சென்னிமலை முகாசிப்பிடாரியூரில் காசநோய் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (20ம்‌ தேதி) நடைபெற்றது.

Erode news, Erode news today- சென்னிமலை முகாசிப்பிடாரியூரில் காசநோய் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (20ம்‌ தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரம் முகாசிப்பிடாரியூரில் நடைபெற்ற நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் காசநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இம்முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், நடமாடும் இலவச எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கான சிகிச்சை மருத்துவமனையில் பெற வேண்டியதின் அவசியம், இளம் வயது திருமணத்தால் பெண்களுக்கு ஏற்படும் சமூக பின்னடைவுகள், கல்வி பாதிப்புகள், இரத்த சோகை நோய், குறை பிரசவங்கள், ஊட்டச்சத்து இல்லாத குழந்தை பிறத்தல், பிரசவ கால தாய் சேய் மரணங்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இந்த முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவ பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட காச நோய் மைய ஒருங்கிணைப்பாளர் சுதன் சர்மா, வட்டார மருத்துவ அலுவலர் குமார், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் லோகநாயகி, சமுதாய சுகாதார செவிலியர் காஞ்சனா, பகுதி சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், நடமாடும் இலவச எக்ஸ்ரே ஊர்தி மூலமாக ஆரம்ப நிலை காசநோய் கண்டறிதலுக்கான நுரையீரல் நுண்கதிர் பட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
Similar Posts
சென்னிமலை மு.பிடாரியூரில் காசநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்டத்தில் 49 அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை உணவு
ஈரோட்டில் வரும் 24ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
அந்தியூர் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
கோபி குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு!
ஈரோடு மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம்
அந்தியூரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.29 லட்சம் மோசடி: அரசு பேருந்து ஓட்டுநர் கைது!
ஈரோடு மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கு 2ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார்!
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.21) மின்தடை
கோபிசெட்டிபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோட்டைச் சேர்ந்த 3 மாத குழந்தை
பவானி நகராட்சியில் கள ஆய்வு  மேற்கொண்ட ஈரோடு ஆட்சியர்
பவானி சன்னியாசிபட்டி மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்