ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
X

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்ட எம்ஆர்பி செவிலியர்கள்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு செய்தனர்.

தேர்தல் வாக்குறுதியின்படி எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் 1500 செவிலியர் பணியிடங்களை எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களைக் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும்.

கொரோனா காலத்தில் பணிபுரிந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப நிரந்தர பணியிடங்கள் உருவாக்க வேண்டும். மகப்பேறு விடுப்பிற்கான ஊதியத்தை வழங்கிட வேண்டும். பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

பாலியல் குற்றங்களை விசாரிக்க அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில தலைவர் ஜி.சசிகலா தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் ச.விஜயமனோகரன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணை பொது செயலாளர் மு.சீனிவாசன் நிறைவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயசுகி, மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
தினமும் ஒரு கப் தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
நாம் தினமும் உணவில் சர்க்கரை எவ்வளவு சேர்க்கலாம் என தெரியுமா?
வாவ் அம்சங்கள்,,,வாட்ஸ்ஆப் வேற லெவல் இப்போ...! என்ன தெரியுமா?
நமது உடலில் கொழுப்பை மெழுகு போல் குறைக்க உதவும் இலவங்க பட்டை தண்ணீர்
ஆரோக்கியத்தின் பொக்கிஷம் சிறு தானியங்கள் நிறைந்த இந்திய தாலி  உணவு
இன்னொரு பூமிய கண்டுபிடிச்சாச்சு..! மனுசங்களே கிளம்புவோமா? நாசா ரெடியாகிடிச்சே..!
வங்காள தேசத்தில் துர்கா சிலை கரைக்க சென்ற இந்துக்கள் மீது தாக்குதல்
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
மழைநீர் தேங்கிய ரயில்வே நுழைவு பாலத்தில் எம்பி பிரகாஷ் ஆய்வு
உங்களைப் போலவே பலர் இருக்கலாம்.. என்ன சொல்கிறது அறிவியல்..? பாரலல் யூனிவர்ஸ் நிஜமாவே இருக்கா?
ஃபோன சுத்தி கலர் கலரா லைட்டு...! iQoo ஓட லேட்டஸ்ட் ஃபோனு வெயிட்டு!
69% தள்ளுபடி விலையில்....  65 இன்ச் டிவி கூட இவ்வளவு கம்மி விலையிலா?
புஷ்பா பட பாணியில் சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட குட்கா