/* */

பர்கூரில் கரைபுரண்டு ஓடியது காட்டாற்று வெள்ளம்

பர்கூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

HIGHLIGHTS

பர்கூரில் கரைபுரண்டு ஓடியது காட்டாற்று வெள்ளம்
X

 சுண்டப்பூர் பள்ளத்தில்  கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள, தாமரைக்கரை சுண்டப்பூர், தேவர்மலை, வழுக்குப் பாறை உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை கனத்த மழை பெய்தது.சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்த பலத்த மழையால், சுண்டப்பூர் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் அப்பகுதியில் இருந்து அந்தியூர் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களுக்கு சென்றவர்கள், தண்ணீர் வடிந்த பின்னரே பள்ளத்தைக் கடந்து சென்றனர்.

இதேபோல் வழுக்குப்பாறை மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால், செலம்பூர் அம்மன் கோவில் பள்ளம் வழியாக எண்ணமங்கலம் ஏரிக்கு வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.ஏற்கனவே எண்ணமங்கலம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதாலும், காட்டாற்று வெள்ளம் காரணமாகவும், கெட்டிசமுத்திரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Updated On: 21 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!