/* */

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகளை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு
X

அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தில் கிணற்றில் விழுந்த பன்றிகள் மீட்கப்பட்டு, காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டன.  

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் மலைக்கருப்புசாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில், இரண்டு காட்டுப்பன்றிகள் தவறி விழுந்து விட்டதாக, அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்திர சாமிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, வனச்சகர அதிகாரியின் உத்தரவின் பேரில், கொம்புதூக்கி மாரியம்மன் கோவில் சரக வனக்காப்பாளர் கேசவமூர்த்தி தலைமையில் வனத்துறையினர், அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜிக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், விவசாய தோட்டத்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி இரண்டு காட்டுப்பன்றிகளையும், கயிற்றின் மூலம் உயிருடன் மீட்டனர். பின்பு தென்பர்கூர் காப்புக்காடு கொம்புதூக்கி மாரியம்மன் கோவில் வனப்பகுதிக்கு கொண்டு சென்று, பன்றிகளை காட்டுக்குள் விட்டனர்.

Updated On: 22 Jun 2021 3:08 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  3. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  6. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  7. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  8. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  9. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  10. ஈரோடு
    ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி