/* */

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் உயிரிழப்பு

அந்தியூரில் நடந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பட்டதாரி ஆசிரியர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் உயிரிழப்பு
X

ஆசிரியர் வேலுமணி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர் வீதி பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 57). இவர் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் அவர் அந்தியூர் பர்கூர் ரோட்டில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த மாருதி ஆல்டோ கார் மோதியதில் படுகாயமடைந்த ஆசிரியர் வேலுமணி, அந்தியூரில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை அவரது உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பட்டதாரி ஆசிரியர் வேலுமணியின் உடல் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

Updated On: 22 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  3. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  4. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  6. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...