/* */

அந்தியூர் அருகே கல்குவாரியை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூர் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரியை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே கல்குவாரியை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்
X

வெள்ளித்திருப்பூர் கொமரயனூர் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் கொமரயனூர் சாலையில் கூப்புகாட்டு பிரிவில் கொமரயனூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டுவருகிறது.

இங்கு பாறைகளுக்கு வெடி வைக்கும் போது வீடுகள் மற்றும் விவசாய நிலத்தில் கற்கள் விழுவதாகவும், பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனை கண்டித்து இன்று மதியம் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில் வெள்ளித்திருப்பூர் உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து சட்டமன்ற உறுப்பினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைதொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் வெள்ளித்திருப்பூர் கொமரயனூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 14 Nov 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்