/* */

அந்தியூர் அருகே உறவுக்கார பெண் மிரட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை

அந்தியூர் அருகே உறவுக்கார பெண் மிரட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே உறவுக்கார பெண் மிரட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் விராலிக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி செலம்பாயி. இவர் ஈரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கீதா (வயது 17) அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். 2-வது மகள் அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கீதாவுடன் அவரது உறவுக்கார பெண் தேவி என்பவரது மகள் காவியா என்பவரும் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி காவியாவின் தாய் தேவி, கீதாவை திட்டி உள்ளார். என் மகளின் செல்போன் எண்ணை ஏன் கொடுத்தாய் என்று கூறி திட்டி மிரட்டி உள்ளார். உன்னால் என் மகள் கெட்டு போய்விடுவாள் என்று கூறி உள்ளார். இதனால் மாணவி கீதா மனம் உடைந்தார்.மாணவி கீதா வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்றார். மீண்டும் அவர் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பினார். அப்போது ஈரோட்டில் வேலை பார்க்கும் தனது தாய் செலம்பாயிடம் போனில் பேசினார். அப்போது அவர் காவியாவின் தாய் தேவி என்னை மிரட்டினார். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி உள்ளார். அதற்கு அவரது தாய் செலம்பாயி அவசரப்பட வேண்டாம். நான் அங்கு வருகிறேன். பேசிக் கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.

ஆனால் இதை மாணவி கீதா ஏற்றுக்கொள்ளவில்லை. வீட்டில் யாரும் இல்லாததால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தாய் செலம்பாயி மீண்டும் தனது மகளை தொடர்பு கொண்டபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அருகில் இருந்தவர்களை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். அங்கு சென்று பார்த்தபோது மாணவி கீதா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் செலம்பாயிக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் அந்தியூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தாய் செலம்பாயி கொடுத்த தகவலின் அடிப்படையில் உறவுக்கார பெண் தேவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவுக்கார பெண் மிரட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 17 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  4. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  6. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  7. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  8. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  9. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  10. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு