/* */

அந்தியூர் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது

அந்தியூர் அருகேயுள்ள மூலக்கடை அடுத்த பனங்கொரையில் கஞ்சா விற்பனை செய்த நபரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட பழனிச்சாமி.

அந்தியூர் அருகேயுள்ள மூலக்கடை அடுத்த பனங்கொரையில் வசித்து வருபவர் பழனிச்சாமி. 55. இவர் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக, வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், நேற்று இரவு, வெள்ளித்திருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் வேலுமுத்து மற்றும் போலீசார், பனங்கொரையில் உள்ள பழனிச்சாமியின் வீட்டில் சோதனை செய்தனர். சோதனையில், சுமார் ஐந்து கிராம் எடையுள்ள கஞ்சாவை 20 பாக்கெட்டுகளில் அடைத்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பழனிச்சாமியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வெள்ளித்திருப்பூர் போலீசார், கஞ்சாவை சப்ளை செய்த குருவரெட்டியூரை சேர்ந்த சிவகாமி என்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

Updated On: 30 Oct 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!