/* */

வெள்ளித்திருப்பூர் அருகே ஓட்டல் உரிமையாளர் பலி

சரக்கு ஆட்டோவும் மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

வெள்ளித்திருப்பூர் அருகே  ஓட்டல் உரிமையாளர் பலி
X

பைல் படம்.

அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் அங்கப்பன் (வயது 45). இவர் ஆலாம்பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று காலை அந்தியூரில் மளிகை சாமான்கள் வாங்குவதற்காக அங்கப்பன், அவருடைய நண்பர் அழகேசனுடன் மொபட்டில் சென்றார். அங்கப்பன் மொபட்டை ஓட்டினார். அவருக்கு பின்னால் அழகேசன் உட்கார்ந்திருந்தார். இவர்கள் இருவரும் ஆலம்பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோவும், மொபட்டும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மொபட்டில் இருந்து அங்கப்பன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அங்கப்பன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் அழகேசன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இறந்த அங்கப்பனுக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு