/* */

அந்தியூரில் இடி-மின்னலுடன் கன மழை

அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. அதனால் மழைநீர் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளில் ஓடியது.

HIGHLIGHTS

அந்தியூரில் இடி-மின்னலுடன் கன மழை
X

நிரம்பி வரும் கெட்டிசமுத்திரம் ஏரி

அத்தாணி, ஆப்பக்கூடல், நகலூர், பெருமாபாளையம், செல்லம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது.

அதனால் மழைநீர் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளில் ஓடியது.பர்கூர் மலைப்பகுதியிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி பர்கூர் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

தொடர் மழையால் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி 17.5 அடி உயரமுடைய கெட்டிசமுத்திரம் ஏரிக்கு செல்கிறது. இதனால் நேற்று 14 அடி உயரம் இருந்த அந்த ஏரி நீர்மட்டம் இன்று 14.50 அடி உயரமாக அதிகரித்து உள்ளது. இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் விரைவில் கெட்டிசமுத்திரம் ஏரி முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 13 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  3. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  10. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!