அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
X

நிலக்கடலை.

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் நான்கு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 159 மூட்டைகள் பச்சை நிலக்கடலை காய் கொண்டு வரப்பட்டது.

இதில் குறைந்த பட்சமாக 25 ரூபாய் 05 பைசாவிற்கும், அதிகபட்சமாக 34 ரூபாய்க்கும், சராசரியாக 28 ரூபாய் 52 பைசாவிற்கும் ஏலம் போனது.

இதேபோல் 105 மூட்டைகள் காய்ந்த நிலக்கடலை காய், குறைந்தபட்சம் 58 ரூபாய் 61 பைசாவிற்கும் அதிகபட்சம் 66 ரூபாய்க்கும் சராசரியாக 61 ரூபாய் 06 பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய வர்த்தகத்தில், 125 குவின்டால் நிலக்கடலை கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் நான்கு லட்சத்து 05 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai healthcare technology