/* */

அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு நிரம்பிய பூனாச்சி ஏரி

அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு பூனாச்சி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு  நிரம்பிய பூனாச்சி ஏரி
X

நிரம்பி வழியும் பூனாச்சி ஏரி.

அம்மாபேட்டை அடுத்துள்ள பூனாச்சியில் 38 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. அம்மாபேட்டை அடுத்துள்ள முகாசிப்புதூர், அட்டவனைப்புதூர் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பூனாச்சி ஏரி தண்ணீரை நம்பித்தான் உள்ளன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பாமல் இருந்தது. இந்நிலையில் ஒரு வாரமாக வடக்கிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. அம்மாேபட்டை பகுதியிலும் மழை பெய்ததால் பூனாச்சி ஏரி தன் முழு கொள்ளவை எட்டியது. இதனால் நேற்று உபரிநீர் வெளியேறி அருகே இருந்த விவசாய தோட்டங்களுக்குள் புகுந்தது. வாழை, சோள பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. ஏரி அருகே உள்ள செந்தூர் நகர் செல்லும் வழியில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு செல்லவும், வெளியே வரவும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு பூனாச்சி ஏரி நிரம்பியதால் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

Updated On: 16 Nov 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!