Begin typing your search above and press return to search.
அந்தியூர் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி
அந்தியூர் அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா தாளபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 55). விவசாயி. நேற்று இரவு வழக்கம் போல் ஈஸ்வரன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 3 மணி அளவில் வீட்டு வெளியே இருக்கும் கழிப்பறைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதனால் ஈஸ்வரன் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ஈஸ்வரன் தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறி மயங்கி விட்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் ஈஸ்வரன் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளித் திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.