/* */

ஊரடங்கு விதிமீறல்: ஈரோட்டில் ஒரேநாளில் ரூ.4.75 லட்சம் அபராதம் வசூல்!

ஈரோட்டில், முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ஒரேநாளில் ரூ.4.75 லட்சம் வசூலிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஊரடங்கு விதிமீறல்: ஈரோட்டில் ஒரேநாளில் ரூ.4.75 லட்சம் அபராதம் வசூல்!
X

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தெரிவித்திருந்தார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச்சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் வடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் வழக்கம் போல், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர். போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் இன்னும் சில வாகன ஓட்டிகள் வெளியே சர்வசாதாரணமாக சுற்றி வருகின்றனர்.

போலீசாரின் நடவடிக்கயில், மாவட்டம் முழுவதும், முகக்கவசம் அணியாமல் வந்த 375 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 875 வழக்குகளும்; 850 இருசக்கர வாகனங்களும், 25 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவ்வகையில், ஒரே நாளில் ரூ.4.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 4 Jun 2021 12:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  3. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  5. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  7. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  9. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  10. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...