/* */

அந்தியூர் பகுதியில் நீர்நிலைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ

வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி, கெட்டி சமுத்திரம் ஏரி ஆகியவை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் அந்தியூர் ஏரிக்கு சென்று கொண்டுள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர் பகுதியில் நீர்நிலைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ
X

ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மற்றும் எம்எல்ஏ. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை எண்ணமங்கலம் எரி கெட்டி சமுத்திரம் ஏரி ஆகியவை அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் அந்தியூர் பெரிய ஏரிக்கு சென்று கொண்டுள்ளது. அந்தியூர் பெரிய ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளதால் அதன் உபரி நீர் வெளியேறும் பகுதிகளான பெரியார் நகர், ஏ எஸ் எம் காலனி, அண்ணா மடுவு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகாமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் அவர் கெட்டி சமுத்திரம் ஏரி, வரட்டுப்பள்ளம் அணை ஆகியவை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், கோபி கோட்டாட்சியர் பழனிதேவி, பவானி டிஎஸ்பி கார்த்திகேயன், அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தமிழ் பரத், அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  4. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  5. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  6. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!