/* */

அந்தியூரில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

செங்கல் சூளைகளில் தங்கிப் பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் உள்பட 450-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

செங்கல் சூளையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வடமாநில பெண்.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பரவலாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், விடுபட்டோருக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்தியூரை அடுத்துள்ள சின்னத்தம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் 7 குழுக்களாக கிராமங்கள்தோறும் சென்று செங்கல் சூளைகளில் தங்கிப் பணியாற்றி வரும் 18 வயதுக்கு மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.சின்னதம்பிபாளையம், நகலூர், புதுமஞ்சநாயக்கனூர், காந்திநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு நேரில் சென்ற மருத்துவக் குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். மேலும், முகாம்களுக்கு வர இயலாத வயதானவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 13 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.