அந்தியூரில் ரூ. 3.45 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூரில் ரூ. 3.45 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

கோப்பு படம் 

அந்தியூரில், 4,200 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ரூ.3.45 லட்சத்துக்கு ஏலம் போயின.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில், நேற்று வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு, 4,200 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை, ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 21 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 450 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 300 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 270 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 220 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 170 ரூபாய்க்கும் விற்பனையாகின.

Tags

Next Story
ai in future agriculture