/* */

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்றுமுதல் பக்தர்களுக்கு அனுமதி

அரசு அனுமதியளிக்கப்பட்டதால் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் கூடினர்.

HIGHLIGHTS

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்றுமுதல் பக்தர்களுக்கு அனுமதி
X

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், இன்று சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கை கருதி, அனைத்து திருத்தலங்களிலும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய வாரத்தின் மூன்று நாட்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அரசு தடை விதித்தது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால், கோவிலைத் திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் கோவில் திறக்கலாம் எனவும் பக்தர்களுக்கு அனுமதியளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், இன்று சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டும் சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 15 Oct 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!