/* */

அந்தியூர் அருகே டூ வீலர் மீது லாரி மோதி விபத்து - இருவர் பலி

அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே டூ வீலர் மீது லாரி மோதி விபத்து - இருவர் பலி
X

விபத்தில் இறந்த கார்த்தி. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் ஊராட்சி நாகிரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 45). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் கார்த்தி (வயது 35). கார்த்தி, அந்தியூர் அரசு பேருந்து கிளையில் நடத்துனர். நேற்று இரவு, இருசக்கர வாகனத்தில் இருவரும் அந்தியூரில் இருந்து, நாகிரெட்டிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, கெம்மியம்பட்டி அருகே சென்றபோது எதிரில் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், தூக்கி வீசப்பட்ட ரவி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கார்த்தி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 7 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது