ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் தைலக்காப்பு நிகழ்ச்சி

ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் தைலக்காப்பு நிகழ்ச்சி
Erode news- கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் தைலக்காப்பு நிகழ்ச்சியின் போது எடுத்த படம்.
Erode news- ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் தைலக்காப்பு சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Erode news, Erode news today- ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் தைலக்காப்பு சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு கோட்டையில் ஸ்ரீதேவி பூமாதேவி உடனமர் கஸ்தூரி அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைலக்காப்பு உற்சவ நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. திருப்பள்ளி எழுச்சி திருமஞ்சனம் மற்றும் மூலவருக்கு தைலம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, ஸ்ரீதேவி பூமாதேவி கஸ்தூரி அரங்கநாத ஸ்வாமி மூலஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும் மூலவர் சேவையும் நடந்தது. தொடர்ந்து தீபராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று காலை திருப்பல்லாண்டு திருப்பள்ளியெழுச்சி திருமஞ்சனம் திருவமுது படைத்தல் பூஜை சாற்று முறை தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகளும், 23ம் தேதி முதல் 8ம் தேதி வரை மண்டல அபிஷேக பூஜையும் நாலாயிர திவ்ய பிரபந்த சேவையும் நடக்கிறது. 9ம் தேதி மண்டல பூஜை பூர்த்தி அடைகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் செல்வம் மற்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயலதா, தக்கார் நந்தகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story