சென்னம்பட்டியில் ரூ.38.60 லட்சத்தில் சமுதாய கூடம் திறந்து வைத்த அந்தியூர் எம்எல்ஏ

சென்னம்பட்டியில் ரூ.38.60 லட்சத்தில் சமுதாய கூடம் திறந்து வைத்த அந்தியூர் எம்எல்ஏ

சென்னம்பட்டி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் புதிய சமுதாய கூடத்தினை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டியில் ரூ.38.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டியில் ரூ.38.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி ஊராட்சியில் சென்னம்பட்டி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.38.60 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதனை, சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி இன்று (7ம் தேதி) திறந்து வைத்தார்.

முன்னதாக, வெள்ளித்திருப்பூர் ஊராட்சியில் ரெட்டிபாளையம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.48.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் அமைக்கும் பணியினை அவர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், குணசேகரன், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், ஒன்றிய திமுக துணைச் செயலாளர் கண்ணுச்சாமி, வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் முருகேசன், விவசாய அணி துணை அமைப்பாளர் மகராசு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மோகனசுந்தரம், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
Similar Posts
விஜயகாந்த் நினைவிடத்தில் நெஞ்சாத்தியே திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
நாகர்கோவில், கோவை ரயில் சேவையில் மாற்றம்: சில ரயில்கள் பகுதியாக ரத்து
சென்னம்பட்டியில் ரூ.38.60 லட்சத்தில் சமுதாய கூடம் திறந்து வைத்த அந்தியூர் எம்எல்ஏ
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
எஸ்பிஐ-ல் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு..!
மின்வேலியில் நேரடியாக மின்சாரம் பாய்ச்சியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சி இணைப்பை எதிர்ப்பு போராட்டம்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை..!
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அம்மாபேட்டை காவலர் தூக்கிட்டு தற்கொலை
கவரப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி..!
ஈரோட்டில் இன்று அதிகாலை மின்கம்பத்தில் கார் மோதி விபத்து: 2 இளம் பெண்கள் உயிரிழப்பு
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
நீர் இருப்பில் கவலைக்கிடமான நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி..!