அந்தியூரில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

அந்தியூரில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
X

அந்தியூர் பேருந்து நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் இனிப்புகளை பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதையொட்டி அந்தியூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகில், ஈரோடு மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வீ. குருராஜ் தலைமையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு, பட்டாசு வெடித்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


இந்த நிகழ்வின்போது, ஒன்றிய துணை செயலாளர் சண்முகானந்தம், நகர பேரவை செயலாளர் பருத்தி பாலு, கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய மீனவர் அணி செயலாளர் விஸ்வநாதன், உன்னால் அவைத் தலைவர் சின்னமாரநாயக்கர், நகரத் துணைச் செயலாளர் வெங்கடாசலம், தொழில்நுட்ப பிரிவு ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture