/* */

அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்: செங்கோட்டையன்

அதிமுக வேட்பாளர் தென்னரசை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

HIGHLIGHTS

அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்: செங்கோட்டையன்
X

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி ஈரோடு அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி ஈரோடு அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை அறிமுகப்படுத்தி முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன், ராமலிங்கம், மா.பா.பாண்டியராஜன், த.மா.க மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், இளைஞர் அணி தலைவர் யுவராஜா எஸ்.டி.சந்திரசேகர் ஆகியோர் பேசினர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு உள் பட பல்வேறு விலை உயர்வு காரணமாக இன்று மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நீங்கள் அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள கே.எஸ். தென்னரசுக்கு வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். மார்ச் 2ம் தேதி வாக்குகளை எண்ணும் போது அது திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்றார்.

முன்னாள் அமைச்சர் கருப்பணன் பேசுகையில், ஈரோடு அரசு மருத்துவமனை அதிமுக ஆட்சியில் மல்டி ஸ்பெஷாலிட்டியாக தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான கட்டடம் கட்டப்பட்டு, மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் ரூ.600 கோடி செலவில் ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு அந்த பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இப்படி பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றால் இன்னும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவார் என்றார்.

முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேசுகையில், நான் அமைச்சராக இருந்தபோது ஜி.எஸ்.டி,. கவுன்சில் உறுப்பினராக இருந்தேன். அப்போது மஞ்சளில் கெமிக்கல் பயன்படுத்தி மதிப்பு கூட்டும் பொருளாக்கும்போது, அதற்கு ஜி.எஸ்.டி. விதிக்கவும், பிற வழியில் மதிப்பு கூட்டும் போது ஜி. எஸ்.டி. விதிக்கக்கூடாது என, ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய ஆணை பெற்றோம். ஈரோடு மாவட்டத்தில் கண்டிப்பாக மஞ்சளுக்கு என்று தனி வாரியம் அமைத்து கொடுக்கப்படும். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசு மிகவும் எளிமையானவர். அவரை நீங்கள் எளிதில் சந்திக்கலாம். உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடியவர். அவர் உங்களோடு இருந்து உங்களுக்காக உழைக்கக்கூடியவர். எனவே நீங்கள் அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு பேசும்போது, அதிமுக ஆட்சியில்தான் மாவட்ட ஆட்சியர்அலுவலக கூடுதல் கட்டிடம், மேம்பாலம், கனி மார்க்கெட் வணிக வளாகம், காளை மாட்டு சிலை அருகே மாநகராட்சி வணிக வளாகம், மின் மயானம், புறவழிச் சாலை, ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் திமுக அரசால் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. அவ்வாறு திட்டத்தை செய்திருந்தால் அதை பட்டியலிடட்டும். நாங்கள் எதிர்க் கட்சியாக இருந்தாலும், மக்களின் பிரச்சினைகளை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்‌ என்றார்.

Updated On: 5 Feb 2023 2:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்