அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு: மார்ச் 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு: மார்ச் 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
X

அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க மார்ச் 22ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க மார்ச் 22ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோயமுத்தூர் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு ஆண்டு 2024-2025ம் ஆண்டுக்கான அக்னிவீர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தர்மபுரி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வருகிற மார்ச் மாதம் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in, http://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்னிவீரர்களின் ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதல் கட்டம் ஆன்லைன் கணினி அடிப்படையிலான எழுத்து தேர்வு, இரண்டாம் கட்டம் ஆட்சேர்ப்பு பேரணி (உடற்தகுதி தேர்வு) ஆகும்.

ஆன்லைன் தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 22ம் தேதி முதல் நடைபெறும். இந்திய ராணுவத்தில் வீரர்கள் தேர்ந்தெடுக்ப்படுவது நியாயமாகவும், வெளிப்படையாகவும் மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே. இந்திய ராணுவத்தில் தேர்வு அல்லது ஆட்சேர்ப்புக்கு எந்த நிலையிலும் லஞ்சம் பெறப்படுவதில்லை.

தகுதியற்ற நபர்கள் ஆட்சேர்ப்பு முகவர்கள் என கூறினால், அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எனவே,கோவையில் நடக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் நடக்கும் ஆட்சேர்ப்பு முகாமில் தகுதியானவர்கள் பங்கேற்று இந்திய ராணுவத்தில் பணிக்கு சேரும் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

Tags

Next Story
Similar Posts
ஈரோடு மாவட்டத்தில் வண்டல் மண், களி மண் இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
ஈரோடு: வெள்ளோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணி; அமைச்சர், ஆட்சியர் நேரில் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வர் மருந்தகம்: வரும் 24ம் தேதி காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
பவானி அருகே ஜம்பையில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்
தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் ஐஐடி-ஜேஇஇ முதல் 5 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா!..
ஈரோடு : பள்ளி மாணவிகளுக்கான தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
மளிகை கடைக்காரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்த உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி
சத்தியமங்கலம் அருகே லாரி கிளீனரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு..!
கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா
செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு!
சென்னிமலை வாரச் சந்தையில் மறுமுத்திரையிடப்படாத 72 எடையளவுகள் பறிமுதல்!
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி