/* */

மொடக்குறிச்சி அருகே லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு: உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வானத்தில் பயணித்த வாலிபர் உயிரிழந்தாா். இதனால் அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

HIGHLIGHTS

மொடக்குறிச்சி அருகே லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு: உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உள்படம்:- பிரபு.

மொடக்குறிச்சி அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வானத்தில் பயணித்த வாலிபர் உயிரிழந்தாா். இதனால் அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் கால்நடை தீவன ஆலை இயங்கி வருகிறது. இந்த தீவன ஆலையில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கால்நடை தீவனம் கொண்டு செல்வதற்காக ஆலைக்கு சொந்தமான லாரிகள் சென்று வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை ஆலையிலிருந்து லாரி நஞ்சை ஊத்துக்குளி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக கோவிந்த நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பிரபு (வயது 27) என்ற எலக்ட்ரீசியன் வந்தபோது நிலைத்தடுமாறி லாரியில் சிக்கியுள்ளார். இதில் லாரி எலக்ட்ரீசியன் மீது ஏறி சென்றதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டு பிரேதத்தை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து மொடக்குறிச்சி தாசில்தார் இளஞ்செழியன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு சடலத்தின் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ஆலையின் சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 23 April 2024 10:02 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...