/* */

ஈரோடு கிழக்கு தொகுதியில் ராட்சத பலூன் பறக்க விட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள்‌ அனைவரும்‌ 100 சதவீதம்‌ வாக்களிக்க வேண்டும்‌ என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு வாசகங்கள்‌ அடங்கிய ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு கிழக்கு தொகுதியில் ராட்சத பலூன் பறக்க விட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
X

பறக்க விடப்பட்ட விழிப்புணர்வு வாசகங்கள்‌ அடங்கிய ராட்சத பலூன்.

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாள்தோறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திரையிடப்பட்டு வருகிறது.

மேலும், கையெழுத்து இயக்கம் மூலமாகவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மிகப் பிரம்மாண்டமான அளவில் கோலங்கள் வரைந்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சமையல் எண்ணெய் கேன் மற்றும் குடிநீர் பாட்டில் ஆகியவற்றில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லை ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோபிசெட்டிபாளையம் கலைக்குழுவின் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலக மேல் தளத்தில் நான் உறுதியாக வாக்களிப்பேன், அனைவரும் வாக்களிப்போம் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்த 35 அடி சுற்றளவு மற்றும் 15 அடி உயரம் கொண்ட ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூனை வானில் 120 அடி உயரத்தில் பறக்க விட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை உதவி ஆட்சியர் பொன்மணி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், ஆகியோர் விழிப்புணர்வு வாசகங்கள்‌ அடங்கிய ராட்சத பலூனை பறக்கவிட்டார்‌.

உடன்‌, தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலரும் ஈரோடு மாநகராட்சி கமிஷனருமான க.சிவக்குமார்‌, துணை ஆட்சியர்‌ (பயிற்சி) காயத்ரி, மாவட்ட சமூக நல அலுவலர்‌ சண்முகவடிவு, உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ முத்துக்குமார்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்.

Updated On: 22 Feb 2023 12:00 PM GMT

Related News