ஈரோட்டில் நாளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஈரோட்டில் நாளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி. 

ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை (14ம் தேதி) நடக்கிறது.

ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை (14ம் தேதி) நடக்கிறது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஈரோடு மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் 14ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜனனி திருமண மண்டபத்தில் நடக்கிறது. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார்.

முன்னதாக காலை 8 மணிக்கு ஈரோடு காவிரி ரோடு ஜகன் வீதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து பொதுமக்கள் 200 பேருக்கு வேட்டி-சேலை. பள்ளிக்கூட சீருடை, நோட்டு- புத்தகம், எழுது பொருட்கள் வழங்குகிறார்.

இதைத்தொடர்ந்து, ஈரோடு சூளை பகுதியில் கட்சி பெயர் பலகையை திறந்து வைத்து பொதுமக்கள் 200 பேருக்கு நல உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி தலைமை தாங்குகிறார்.

எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு. ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஈரோடு மாநகரத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story