/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 3 வாரங்களாக தினமும் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று (ஏப்.,25) செவ்வாய்க்கிழமை சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மாவட்டத்தில் கொரோ னாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 816 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 001 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 734 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் 37 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 122 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 25 April 2023 1:30 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  4. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  5. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  6. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  7. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!