/* */

தீபாவளி பண்டிகையில் 5 கிலோ தங்கம் விற்பனை

தீபாவளிக்கு ஐந்து கிலோ அளவில் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தீபாவளி பண்டிகையில் 5 கிலோ தங்கம் விற்பனை
X

பைல் படம்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் தர்மராஜ் கூறியதாவது: கொரோனாவால் கடந்தாண்டு ஒட்டுமொத்த பொருட்களின் விற்பனையும் பாதித்தது. இந்தாண்டு தீபாவளிக்கு மக்கள் சற்று இயல்பு நிலை திரும்பினாலும், ஜவுளி, அத்தியாவசிய பொருட்களை மக்கள் அதிகம் வாங்கினர். தங்கம் மீதான மோகம் குறைந்திருந்தது.

அதேசமயம் அக்.,13ல் ஒரு கிராம், 4,585 ரூபாய், 14ல், 4,530 ரூபாய், 29ல், 4,530 ரூபாய், 30ல், 4,525 ரூபாய் என விற்றது. நவ.,1, 2ல், 4,520 ரூபாய், 3ல், 4,505 ரூபாய்க்கு விற்றது. கடைசி நேரத்தில் தான் பெரும்பாலான நிறுவனங்களும் போனஸ், முன்பணம் வழங்கினர். இதன் காரணமாகவும், மாவட்டத்தில் விவசாயத்துக்கு முழு அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு, பாசனப்பணி தீவிரமாக நடந்ததாலும், தங்கம் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்தது. தீபாவளி விற்பனையாக, ஐந்து கிலோ அளவில் தங்கம் விற்பனையானது. கடந்தாண்டைவிட அதிகம் என்றாலும், முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில், சற்று குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 10 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?