அந்தியூரில் ரூ.4.98 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனை

X
பைல் படம்
By - S.Gokulkrishnan, Reporter |30 Jun 2022 5:15 PM IST
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மாலை நடந்த ஏலத்தில் 4 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, செம்புளிச்சாம்பாளையம், பச்சாம்பாளையம், பள்ளிபாளையம் பருவாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், 16 மூட்டைகள் பச்சை நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
இதில், ஒரு கிலோ நிலக்கடலை குறைந்த பட்சமாக 28 ரூபாய் 29 பைசாவிற்கும், அதிகபட்சமாக 40 ரூபாய்க்கும், 242 மூட்டை காய்ந்த நிலக்கடலை குறைந்த பட்சமாக 57 ரூபாய் 89 பைசாவிற்கும் , அதிக பட்சமாக 68 ரூபாய்க்கும் ஏலம் போனது.
நேற்றைய , வர்த்தகத்தில், 86.15 குவிண்டால் கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 731 ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu