கிளாம்பாடி பேரூராட்சி தலைவர் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு

கிளாம்பாடி பேரூராட்சி தலைவர் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு
X
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பேரூராட்சி தலைவர் உட்பட 3 பேரை போக்சோவில் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர் மகனுக்கு உதவிய பேரூராட்சி தலைவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே நஞ்சை கொளாநல்லி பகுதியை சேர்ந்தவர் 16 வயது நிரம்பிய 10ம் வகுப்பு மாணவி. இவருடன் கருமாண்டாம்பாளையத்தை 18 வயது நிரம்பாத சிறுவன் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளார். இதில் 10ம் வகுப்பு மாணவி 4 மாத கர்ப்பம் அடைந்தார்.

இதையடுத்து, மாணவி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாணவியின் பெற்றோர், மலையம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் மீது மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன், அவரது தந்தை விஜயன், தாய் கவுரி, பள்ளி ஊழியர் சிவகாமி, கிளாம்பாடி பேரூராட்சி தலைவர் அமுதா ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறுவனின் பெற்றோரான விஜயன், கவுரி, பேரூராட்சி தலைவர் அமுதா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறுவன், பள்ளி ஊழியர் சிவகாமி ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai in future agriculture