உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோட்டைச் சேர்ந்த 3 மாத குழந்தை

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோட்டைச் சேர்ந்த 3 மாத குழந்தை

Erode news- ஈரோட்டில் 3 மாத குழந்தை புகைப்படங்களை அடையாளப்படுத்தி காட்டியதால் குழந்தைக்கு நோபல் ரெக்கார்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Erode news- ஈரோட்டில் 3 மாத குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Erode news, Erode news today- ஈரோட்டில் 3 மாத குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் ஹரிபாஸ்கர் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி லோகித் சோனாலி. இந்த தம்பதிக்கு ஆதிரன் என்கிற 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

இவரது மனைவி லோகித் சோனாலி தனது மகனுக்கு 2 மாதம் முதலே கருப்பு வெள்ளை நிற புகைப்படங்களை காண்பித்து வந்துள்ளார். இதன் பின்னர் சமூக வலைதளங்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நான்கு மாத பெண் குழந்தை புகைப்படங்களை காண்பித்து சரியாக சொல்லும் பிரிவில் நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் செய்து இருப்பதை பார்த்துள்ளார்.

இந்நிலையில், தனது 3 மாத குழந்தை ஆதிரனுக்கு அவ்வப்போது புகைப்படங்களை காண்பித்து குழந்தை நினைவாற்றல் திறனை அதிகரித்து வந்துள்ளார். பின்னர், நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் செய்வதற்காக வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார்.

இதனை ஆய்வு செய்த நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் குழுவினர், 3 ஆண் குழந்தை ஆதிரன் பழங்கள்,காய்கறிகள்,எண்,வண்ணம் மற்றும் வடிவம் அடங்கிய 130 புகைப்பட அட்டைகளை சரியாக அடையாளம் காண்பித்து வெற்றி பெற்றான்.

இக்குழந்தை உலக சாதனைக்கு தகுதியானவர் என்று முடிவு செய்த நிலையில் குழந்தைக்கு சிறப்பு சான்றிதழை நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் குழு வழங்கியுள்ளது. இந்நிலையில் உலக சாதனை படைத்த குழந்தையாக மாறியுள்ளார் 3 மாத குழந்தையான ஆதிரன்.

Tags

Next Story
Similar Posts
கோபிசெட்டிபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோட்டைச் சேர்ந்த 3 மாத குழந்தை
பவானி நகராட்சியில் கள ஆய்வு  மேற்கொண்ட ஈரோடு ஆட்சியர்
பவானி சன்னியாசிபட்டி மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பேருந்து நிலைய கழிப்பிடத்தை சுத்தம் செய்ய மனு குடுங்க..! எம்எல்ஏவிடம் சுகாதார ஆய்வாளர் பகீர்..!
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.20) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
பவானியில் பொதுமக்களிடம் இருந்து 82 கோரிக்கை மனுக்களை பெற்ற ஈரோடு ஆட்சியர்
ஈரோடு மாவட்டத்தில் 18 போலீசார் பணியிட மாற்றம்
கடம்பூர் மலைப்பகுதியில் வீதி நாடகம் மூலம் சட்ட விழிப்புணர்வு
பவானி அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் கள ஆய்வு
ஈரோட்டில் வரும் 21ம் தேதி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்..!
பிந்தரன்வாலே துறவி அல்ல: எமர்ஜன்சி பட நாயகி கங்கனா ரணாவத் எம்பி பேச்சு
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையை பெருக்க உதவும் சீட்டா திட்டம்