அந்தியூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.89 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.89 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
X

பைல் படம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில், 7,014 தேங்காய்கள், குறைந்தபட்ச விலையாக 4 ரூபாய் 23 பைசாவிற்கும், அதிகபட்ச விலையாக 14 ரூபாய் 53 பைசாவிற்கும்,55 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 75 ரூபாய் 79 பைசா முதல் 85 ரூபாய் 26 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும்,17 மூட்டைகள் எள் கிலோ 113 ரூபாய் 29 பைசாவிற்கும், 4 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ 23 ரூபாய் 80 பைசாவிற்கும் விற்பனையானது. நேற்றைய வர்த்தகத்தில், மொத்தம் 74.85 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 2 லட்சத்து 89 ஆயிரத்து 176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story