அந்தியூர் அருகே பர்கூர் மலைக்கிராம பெண்ணுக்கு 108 ஆம்புலன்சிலேயே பிரசவம்

அந்தியூர் அருகே பர்கூர் மலைக்கிராம பெண்ணுக்கு 108 ஆம்புலன்சிலேயே பிரசவம்
X

Erode news-108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தையுடன் அவசர கால மருத்துவ நுட்புணர் மௌலிதரன், ஓட்டுநர் ஆனந்த்.

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியில் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சில் சென்ற பெண்ணுக்கு, ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

Erode news, Erode news today- அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியில் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சில் சென்ற பெண்ணுக்கு, ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி பெரிய செங்குளத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கங்கேஷ் (வயது 27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கங்கேசுக்கு இன்று (19ம் தேதி) பிரசவ வலி ஏற்பட்டது.

இதனையடுத்து, அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, பர்கூர் ஓசூர் 108 ஆம்புலன்சில் அந்த பெண்ணை ஏற்றிக் கொண்டு அடர்ந்த வனப்பகுதி வழியாக அந்தியூர் அரசு மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது, வனப்பகுதி சாலையில் மணியாச்சி பள்ளம் என்ற இடத்தில் வந்த கங்கேசுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால், நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுநர் ஆனந்த் வாகனத்தை ஓரத்தில் நிறுத்தினார். இதைத் தொடர்ந்து, ஆம்புலன்சில் இருந்த அவசர கால மருத்துவ நுட்புணர் மௌலிதரன் பிரசவம் பார்த்தார்.

இதில், கங்கேசுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பத்திரமாக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு மலை கிராம பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ நுட்புணர் மௌலிதரன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆனந்த் ஆகியோரை மலைக் கிராம மக்கள் பாராட்டினர்.

Tags

Next Story